Monday, February 25, 2008

நல்லதோர் வீணை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது



நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

சொல்லடி சிவசக்தி -எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் .

வல்லமை தாராயோ -இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி -நிலச்

சுமையென வாழ்ந்திடப்புரிகுவையோ ?

விசையுறு பந்தினைப்போல -உள்ளம்

வேண்டிய படி செலும் உடல்கேட்டேன் !

நசையறு மன ங் கேட்டேன் -நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் !

தசையினைத் தீச்சுடினும் -சிவ

சக்தியை ப்பாடும் நல் அகங்கேட்டேன் !

அசைவறு மதிகேட்டேன் -இவை

அருள்வதில் உனக்கேதுந்த் தடையுளதோ ?

1 Comments:

At July 30, 2008 at 7:15:00 PM PDT , Blogger Sri Srinivasan V said...

Thank you ,
Namaskaram,
Anbudan,
Srinivasan V.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home