Saturday, April 12, 2008

முயற்சி

நமது தேசத்தில் தெய்வபக்தி அதிகமென்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஆனால் தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமலிருந்தால்,
தெய்வமும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கும்.

தெய்வத்தாள் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். ( திருக்குறள் 619 )

(கடவுளை மட்டும் நம்பிக்கொண்டிராமல்,நாமும் சற்று முயற்சியுடன் உழைத்தால்
...கண்டிப்பாக அந்த உழைப்பிற்கேற்ற வெற்றி கிடைக்கும்.)

தெய்வத்தை நம்பினால் மட்டும் போதாது, நாமும் முயல வேண்டும்.
பாரதி என்ன சொல்கிறார்....

ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால் நாம் அதன் மீது கவனத்தை செலுத்தாமல்
நாம் மற்ற வேலைகளை பார்க்கிறோம்.அழத்தொடங்கினால் ...அந்த வேலையை விட்டுவிட்டு
குழந்தையை சமாதானப்படுத்த முயலுகிறோம். அது போல ஒரு காரியத்தில் ஊக்கத்தோடு ஈடுபடுவோமானால்,
எப்படியாவது ஒரு முடிவை தெய்வம் காட்டும்.

உதாரணத்துக்கு..பெண் விடுதலை..பல்லாயிரம் வருடங்களாக பெண்களை அடிமைப்படுத்தி
வருகிறோம்.தெய்வம் தானாக அவர்களுக்கு விடுதலை கொடுத்ததா..இல்லை..

"உங்களுடைய வழி இது தான்" என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி வைத்தது.
இப்போது நாம் "இப்படி இருக்கமாட்டோம்" என்றால் "சரி...உங்களுக்காக இன்னொரு வழி
உண்டாக்கியிருக்கிறேன் அதன்படி நடவுங்கள்" என்று கூறி நம்மை ஊக்கப்படுத்தும்.
"நான் தூங்கத்தான் செய்வேன் " என்று தெய்வத்திடம் சொன்னால்..
தெய்வம் "சுகமாய்த் தூங்கு ...உனக்காக மெத்தென்று படுக்கை போட்டு
தருகிறேன்" என்று சொல்லி நம்மைத் தட்டி தூங்கப்பண்ணுகிறது.

"மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்கவேண்டும்..இதோ!
எழுகிறோம் என்றால் "எழுந்திரு குழந்தாய்...இதோ பார் உனக்கு இந்த பெரிய
வழியை ஏற்படுத்தி இருக்கிறேன்.அந்த வழியே போய் நீ நன்மை அடை!" என்கிறது.

அதனால்...சகோதரிகளே! தெய்வத்தை நம்பி நாம் முன்னடையும் வழியை நாமே
தேடவேண்டும். "முயற்சி திருவினையாக்கும் ' என்பது முன்னோர் உறுதிமொழி
நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்தல் அவசியம்.நம்முள் ஏதேனும் வருத்தம்
ஏற்பட்டால் அதை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் தெய்வத்தின் குழந்தைகள்.நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவு கொடுப்பாள்.
நாம் அழுவதற்கு வழி முயற்சியினால் தெய்வத்தை இரங்குவித்தல்...ஆதலால் முயற்சி செய்வோம்.

தெய்வம் நன்மையைத்தான் செய்யும்.

1 Comments:

At July 29, 2008 at 2:24:00 AM PDT , Blogger Sri Srinivasan V said...

GOD BLESS YOU.
A fantastic INITIATIVE.
MAHA SAKTHI SHALL PROTECT AND GUIDE YOU.
GOOD WISHES.
ANBUDAN,
Srinivasan. V.
Perth, Australia.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home