Monday, April 14, 2008

பறையர் என்பவர் உத்தமமான தொழில் செய்பவர்

'பறையர்' என்பது மரியாதை உள்ள பதம் இல்லை என கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர்
என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள்.ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத்
தமிழ் நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர்.

பறை என்பது பேரிகை.பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப்போகும்போது
ஜயபேரிகை கொட்டிச்செல்லும் உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்த படியால் இவர்களுக்கு
இப்பெயர் வழங்குவதாயிற்று.'இது குற்றமுள்ள பதமில்லை' என்பதற்கு ருஜு வேண்டுமானால்
மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்கு 'பறையர் மகாசபை' என்று பெயர்
வைத்திருப்பதைக் காண்க.அவர்களை மிருகங்களைப் போல நடத்துவது குற்றமேயொழிய பறையர்
என்று சொல்வது குற்றமில்லை.

ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக்கொண்டு பிராமணரை அடிக்கும்படி
செய்யும்வரை சென்னை பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.பார்ப்பானைத்தவிர மற்ற
ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள்.எல்லாரையும் அடிக்க பறையரால் முடியுமா?
பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்ய தொடங்கவில்லையா? எதற்கும் இந்து மத விரோதிகளின்
பேச்சைக் கேட்கலாமா? நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள்கும்பிடவில்லையா?

பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை.அவர்களுக்கு முதலாவது
வேண்டுவது சோறு.அவர்களை எல்லாம் ஒன்று திரட்டு.உடனே விபூதி,நாமத்தைப் பூசு.
பள்ளிக்கூடம் வைத்துக்கொடு..கிணறு வெட்டிக்கொடு.இரண்டு வேளை ஸ்னானம் பண்ணச்சொல்லு..
அவர்களோட சமத்துவம் கொண்டாடு.நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன்.அவர்களை எல்லாம்
ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் சொல்லுங்கள்.நம்முடைய பலத்தைச் சிதற விடாதீர்கள்.
மடாதிபதிகளே...நாட்டுகோட்டைச்செட்டிகளே..இவ்விஷயத்தில் பணத்தை வாரிச்செலவிடுங்கள்.இது நல்ல பலன் தரக்கூடிய கைங்கரியம்.தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கரியம்.

'பறையரை' பரை (அதாவது ஆதிசக்தி முத்துமாரி)யின் மக்கள் என்றும் பொருள் சொல்வதுண்டு.நமக்கு மண்ணுழுது,நெல்லறுத்துக் கொடுக்கும் ஜாதியரை நாம் நேரே நடத்த வேண்டாமா?இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழி தேடிக் கொள்ளுங்கள்.
நாட்டிலுள்ள பறையர் எல்லோரும் உண்மையான ஹிந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது.அவர்களை கை தூக்கிவிட்டு மேல் நிலைக்குக் கொண்டுவருதல் நம்முடைய தொழிலாகும்.அவர்களுக்கு நல்ல சோறு.நல்ல படிப்பு முதலிய சௌக்கியங்களும் மற்ற மனுஷ்ய உரிமைகளும் ஏற்பாடு செய்து கொடுத்தல் நம்முடைய கடமையாகும்.

3 Comments:

At April 18, 2008 at 5:51:00 PM PDT , Blogger THAMIL MAGAN said...

HI
WHILE DOING WORD QUIZ ON THE WEB SITE WWW.FREERICE.COM THERE WAS A WORD PARIAH IN ENGLISH I CLICKED IT ON OUT CAST, I AS RIGHT.IT HAS GONE TO ENGLISH DICTIONARY , HOW YOU GONNA STOP.
THAMIL MAGAN

 
At April 18, 2008 at 5:55:00 PM PDT , Blogger THAMIL MAGAN said...

YOU WERE RIGHT TO SOME EXTENT, I KNOW FEW PARIAH PEOPLE IN TORONTO, THEY ARE FROM SRI LANKA . AND I HAVE NOTICED THEY WERE ALWAYS LOUD, TALK IN YELLING TONE,THEY FIGHT FOR NOTHING. I THINK IT 'S IN THE BLOOD TO BE SO LOUD , FOR THEY BEING THE ANNOUNCERS IN THE TAMIL KINGS' COURT

THINK ABOUT IT.

 
At January 24, 2009 at 8:16:00 PM PST , Blogger dondu(#11168674346665545885) said...

பாரதியார் இது சம்பந்தமாக எழுதிய கட்டுரையிலிருந்து வாக்கியங்களை போட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

அப்படியானால் அவர் பெயரையும் சேர்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home