Tuesday, September 24, 2019

12- பழைய உலகம்

(பாரதியின் வரிகளிலேயே)

இந்த உலகம்  மிகப் பழமையானது.இதன் வடிவம் புதிதாகத் தோன்றும்.இயற்கை பழைமை.தனி வேப்ப மரம் சாகும்..ஒற்றை வேப்ப மரம் பிறக்கும்.வேம்புக் குலம் எந்நாளும் உண்டு.பூமியுள்ளவரை வெயில் என்றைக்கும் இப்படியே அடிக்கும்.மழை, காற்று,பிறப்பு, வளர்ப்பு.நோய், தீர்வு,கட்டு, விடுதலை,இன்பம்,தீமை,துன்பம்,பக்தி, மறதி,நரைப்பு,துயரம்,கலக்கம் எல்லாமே எக்காலத்திலும் உண்டு.

கருவிகள் மாறுபடுகின்றன.இயற்கை செல்கின்றது.ஏன் சொல்கிறேன் தெரியுமா? நமக்கெல்லாம் தெரியாமல் புதிய நாகரிகம் பிறந்திருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள்.நான் அதை நம்பவில்லை.உலகமே பழைய உலகம்.

ஏழை, பாடு எப்போதும் கஷ்டம்.பணக்காரனுக்கு பலவித சௌகரியங்கள் உண்டு.கோயில் காத்தவனுக்கு பஞ்சமில்லை.எவன் கை ஏறியிருக்கிறதோ அவனது பாடு கோலாகலம்.ஏழைக்குக் கஷ்டம்.

பணக்காரன்- ஏழை என்ற பிரிவு முன் காலத்தில் எப்படி உண்டாயிற்று?

குடி,படை என்ற இரண்டாக மனிதஜாதி ஏன் பிறந்தது?எல்லோரும் ஒன்றுகூடி உழுது பயிரிட்டு பிழைக்கும் கிராமத்தில் வேற்றுமை எந்தக் காரணத்தால் வந்தது?

இவையெல்லாம் எஜமானன் விசாரணைகள்.இந்த நிமிஷம் சௌகர்யமில்லை.ஏழை பணக்காரன் விஷயத்தை மாத்திரம் இப்போது கருதுவோம்.

ஒரு செட்டி வியாபாரத்தில் நொந்து போய்த் தனது வீட்டு பஞ்சாங்கத்தையரிடம் "பணக்காரனாவதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.

நவக்ரஹ பூஜை செய்ய வேண்டும் என அய்யர் சொல்ல, "எவ்வளவு செலவாகும்?" என செட்டி கேட்டான்.

"பத்து பொன்னாகும்"

"என்னிடம் இப்பொழுது கொழும்புக்காசு..தென்னை மரம் போட்டது..ஒற்றைக் காசுக் கூடக் கிடையாது,இந்த நிலையில் என்ன செய்தால் பணம் கிடைக்குமென்று உம்முடைய சாஸ்திரம் சொல்கிறது? அதைச் சொல்லும்"

"நீ போன ஜன்மத்தில் பிராமணருக்கு நல்ல தானங்கள் செய்திருக்க மாட்டாய். அதனால் உனக்கு இந்த நிலைமை.இந்த ஜன்மத்தில் இனியேனும் புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் செல்வமுண்டாகலாம்"

இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரசப்படவில்லை."அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்க்கையில் செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எந்தவிதமான லாபமுமில்லை.அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை.இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம்"

எந்தவிதமான மிருகங்கள் கூடி கட்சி ஏற்படுத்தி தன் குலத்தைத்தானே அழிப்பது வழக்கமென்று தோன்றவில்லை.மனித குலத்திற்கு மட்டுமே இந்த வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது

தீமை எக்காலத்திலும் உண்டு.விஷத்துக்கு மாற்றும்,நோய்க்கு தீர்வும்,வறுமைக்கு செல்வமும், அறிவுக்குக் கல்வியும் எக்காலத்திலும் தேடலாம்.

மனிதர்கள் கருவிகளையே மாற்றுகின்றனர்,மற்றபடி பழமையை விடாமல் நடத்தி வருகிறார்கள்

ஒரு வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டுமானால் ஒரேயடியாக முடியாது.பழைய வழக்கப்படி மெதுவாக ஒவ்வோர் அடியாகத்தான் போக வேண்டும்.பதறின காரியம் சிதறும்.மெதுவாக செல்வொனே குறியடைவான்.பழைய வழிதான் நல்வழி.அதுதான் எப்போதும் நடக்கக்கூடிய வழி.உலகத்தில் எல்லாக் காரியங்களும் படிப்படியாகத்தான் ஏற்கிறது.படீலென்று ஏறினால்,படீலென்று விழ நேரிடலாம்.காற்றாடி துள்ளிப் பாய்கிறது.சூரியன் ஒரே கணக்காக நடக்கிறான்.அவன் நெறி மாறுவதில்லை.தாழ்ப்பதில்லை.செல்லுகின்றான்..எப்போதுமே ஏறிச் செல்வான்.பழையவழிதான் வியாபாரத்துக்கு சரியான வழியாகும் 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home