Wednesday, May 21, 2008

குற்றங்கள்

கைதிகளை அன்புடன் நடத்தவேண்டும்.அவர்களும் மனிதர்கள்தானே.
ஏதோ தெரியாமல் குற்றம் செய்துவிட்டார்கள்.ஒழுங்கானபடி இருந்திருந்தால் செய்திருப்பார்களா?
தெளிந்த புத்தி இருந்தால் நடந்திருக்குமா?நல்ல நட்புடன் பழக்கப்படுத்தியுருந்தால் இந்த நிலைக்கு
இழிந்திருப்பார்களா?ஜன சமூகத்திலே சிலரை நாகரீக நிலைமைக்குக் கீழே அமிழ்த்து வைத்த குறை
யாரைச் சேர்ந்தது? இப்போது கூட சிறு பிள்ளைகள் குற்றம் செய்தால் கொடூர தண்டனை விதிப்பதில்லை
திருத்த பள்ளியிலே போடுவார்கள்.

குற்றம் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் அக்குற்றம் செய்யாதபடி
அறிவிலும்,ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்யவேண்டும்.இந்த கருத்துடன் தண்டனை அளிிப்பவர்களை
தர்ம தேவதை மன்னிக்கும்.பழிக்கு பழி வாங்கி விட வேண்டும் என்ற கருத்துடன் தண்டனை செய்கின்ற
அதிகாரம் மனிதனுக்கே கிடையாது.

ஏழையை பணக்காரனாக்கினால் பிறகு திருடமாட்டான்.பேராசைக்காரனைக் கொஞ்சம்
ஏழையாக்கினால் பிறகு திருடமாட்டான்.மூடனுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்தால், இந்திரியங்களைக்
கட்டியாள முடியாதவனை விரதங்களிலே போட்டால்,உயர்ந்த பதவியிலிருப்போர் எப்போதும் நியாயத்தையே
செய்து காட்டினால்,பிறகு களவு இராது.

பள்ளிக்கூடங்கள்,தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால்,சிறைச்சாலைகள்
குறையும்.

பொதுவாக நம்மிடத்தில் ஒரு துர்க்குணமிருக்கிறது.தான் ஒரு குற்றம் செய்தால்,
அதை சுண்டைக்காய் போலவும்,அதே குற்றத்தை மற்றவன் செய்தால்,அதை பூசணிக்காய் போலவும்
நினைக்கிறார்கள்.மாமியார் உடைத்தால் மண்கலம்..மருமகள் உடைத்தால் வெண்கலம்.

மனிதனுக்கு உண்மையாகவே புத்தித் தெளிவும்,யோக்யதையும் தொடங்கும்போது,
பிறர் குற்றங்களை மன்னிக்கும் எண்ணம் உண்டாகிறது.மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து
விடுகிறான் அல்லது பிறர்க்கு தெரியாமல் மறைக்கிறான் அல்லது பொய்க்காரணங்க்ள் சொல்லி அது
குற்றமில்லை என்று நிரூபிக்க முயற்சி செய்கிறான்.குற்றத்திற்கு காரணம் அறியாமை.அதை நீக்கும்
வழி சத்சங்கமும்,தைர்யமும்.பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமற்றவர்களிடமே காணப்படும்.
குற்றம் செய்வோர் பரஸ்பரம் மிகுந்த எரிக்சலோடிருப்பார்கள்.ஒரு தொழிலை சேர்ந்தவர்களுக்குள்ளே
பொறாமை உண்டாவது சகஜம்தானே!
நீதி என்பது பொது ஒழுக்கம்.ஒரு கிராமத்தில் வலியவனுக்கு ஒரு நியாயம்...எளியவனுக்கு
ஒரு நியாயம் என்றால் ..அங்குள்ள நீதிக்காரரை உடனே மாற்ற வேண்டும்.இல்லாவிடின்..கிராமம் விரைவில்
அழிந்துவிடும்.ஜனங்கள் குற்றம் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக் கொள்ளவேண்டும்.நீதிக்காரர் குற்றம்
செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீதிக்காரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு.நியாய ஸ்தலங்களிலிருந்து நீதியை பரிபாலனம்
செய்வோர் ஒரு பகுதி.நீதி சபைகளிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றொரு பகுதி.இவ்விரு திறத்தாரும்
கோணல் வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொது ஜனங்களைச் சேர்ந்தது

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home