Monday, September 23, 2019

பராசக்தியிடம் வேண்டுதல்

(பாரதியார் பராசக்தியிடம் வேண்டியது)

அன்னையே...விடுதலையே இன்பத்திற்கு வழி.விடுதலைப் பெற்றோர் வறுமையிலிருந்து மாறிச் செல்வமடைவார்கள். மெலிவும், நொயும் நீங்கி வலிமையும்,உறுதியும் பெறுவார்கள்.சிறுமை நீங்கிப் பெருமை காண்பார்கள்.துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்.
(பாரதியார் பராசக்தியிடம் என்ன வேண்டுவார் தெரியுமா?)

நான் விடுதலைப் பெறுவேன்.என் கட்டுகள் அறுபடும்.என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன்.என்னிச்சையிலே தீங்கு விளையாது.எனக்கும் துன்பம் விளையாது.நன்மைகளே நிறைவேற்றும்படியாக நிமிடம் தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக..உயிர் வேண்டுகின்றேன்.தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர்.

உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்து காக்கின்ற உயிர்.

அறிவு வேண்டுகின்றேன்.எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு..எங்கும் எப்போதும் அச்சமில்லாத வலிய அறிவு.

பிற உயிருக்கு தீங்கு தேட மாட்டேன்.என்னுடைய உயிருக்கும் தீங்கு வரக்கூடாது.

பராசக்தி, நின்னருளால் நான் விடுதலைப் பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home