Monday, May 19, 2008

புலால் உண்ணுவது பற்றி பாரதி

ஒரு சமயம் பாரதியாரிடம் அவரது நண்பர் புலால் உண்ணுவதைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்.அந்த உரையாடலின் தொகுப்பு.
நண்பர்- நீங்கள் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதும் போது எந்த வகுப்பினருக்கும் மன வருத்தம் ஏற்படாது எழுதுங்களேன்.உலகத்தை சீர்திருத்த வேண்டுமென்பதும்..உலகத்தாருக்கு இயன்றவரை நன்மை செய்ய
வேண்டுமென்பதே நீங்கள் எழுதுவதன் நோக்கம்.அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால்..நம்
கொள்கையைச் சிறிதும் கோபமில்லாமலும்..ஆத்திரப்படாமலும்..பிறர் மனம் நோகாமலும் இன் சொற்களால்
எழுத வேண்டும்.
பாரதியார்-மிகவும் நன்றாகச் சொன்னீர்கள்..நானும் அதுபோலவே நினைக்கின்றேன்.ஆனாலும் நம் நாட்டில்
பெண்களின் நிலைமை,ஏழைகளின் நிலைமை,சாதிக்கொடுமை,மிருகம்-பறவைகள் நிலைமை
இவற்றைக்குறித்து எழுதும் போது சிறிதும் ஈவு,இரக்கம் இல்லாத மக்கள் மீது கோபம் வருகிறது.
கோபத்தை அடக்க முயற்சிக்கிறேன்.ஆனால் முடிவதில்லை..ஆடு..மாடு..தின்பவரை நான்
கண்டித்து எழுதினால்..என் மீது அதிகம் கோபப்படுவார்கள்.ஊண் உண்ணுவதை நிறுத்த மாட்டார்கள்.
நண்பர் - மிருகங்களை கொன்று தின்னும் அநியாயத்தை நினைக்கும் போது,எனக்கும் அடக்க முடியாத வயிற்று
எரிச்சல் உண்டாகத்தான் செய்கிறது.அவற்றை வெட்டுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆட்டை
வெட்டப்போகும் சமயத்தில் அது தலையை இங்கும்..அங்கும் ஆட்டிவிட்டால் வெட்டு சரியாக விழாது.
அதனால் அதன் வாய்க்கெதிரே சிறிது பச்சைப்புல்லை நீட்டுவார்கள்.அது அப்புல்லைத் தின்னமுகம்
நேரே நீட்டும் சமயத்தில் திடீரென ஒரு வெட்டு வெட்டி அதன் தலையை துண்டித்து விடுவார்கள்.
அதைப் பார்க்கும் போது..அந்த வெட்டுபவனை மன்னிக்கவே முடியாது என்றே தோன்றும்.வெட்டிக்
கொன்றுவிடும் இவர்களால் அந்த ஆட்டிற்கு திரும்ப உயிரைத் தரமுடியுமா?சங்கரனயினார் கோவில்
அருகேஒரு கிராமத்தில் மாடசாமி கொவில் ஒன்று இருக்கிறதாம்.அந்த மாடசாமி பல வருஷங்களுக்கு
முன்..கொலை,கொள்ளை முதலிய செயல்களில் வீரனாய் இருந்தானாம்.ஆனால் ஏழை,எளியோர் மீது
கருணை கொண்டவனாம்.அவன் இறந்த பின் அவனை அந்த இடத்தில் சமாதி வைத்து,சமாதியில்
கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்களாம்.அங்கு 200 அல்லது 300 கழுமரங்கள் நட்டு அவற்றில்
ஆடுகளை கோர்த்து வைத்திருப்பார்களாம்.அவை குற்றுயிராகத் துடிக்குமாம்...அவை இறந்த பின்
இரத்தமும்,நிணமும் ஒழுகிக் கொண்டிருக்குமாம்.அது ஒரு மகா பாதகச் செயல்.
பாரதியார்- நமது சில்லறை தெய்வங்களின் கோவில்களிலே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் ஆடுகள் வெட்டப்
படுவதை நினைத்தால்..எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது.கோபத்தோடு எழுதாதீர்கள்
என்கிறீர்கள்..இப்படி நடக்கையில் வேறு எப்படி எழுத முடியுமாம்?
இவ்விதமாக உரையாடல் நடந்து முடிந்ததும் பாரதியார் பத்திரிகை கட்டுரை ஒன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

" தமிழ் நாடு மக்கள் தலைவர்களே...உங்கள் காலில் விழுந்து கோடி முறை நமஸ்காரம் செய்கிறேன்..புலால்
உண்ணுவதை நிறுத்துவதற்கு ஏதேனும் வழி செய்யுங்கள்"

1 Comments:

At September 11, 2008 at 8:30:00 AM PDT , Blogger Ramakrishnan said...

tvrk it is really nice

i love your websites

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home